நீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழப்பு!
மாகந்துரை – மாவரெல்லை பகுதியைச்சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவன் தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்உயிரிழந்த சிறுவனின் சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து மீட்டு வைத்தியசாலைக்கு அனுமதித்துள்ளனர்.