யாழ். பல்கலையின் வவுனியா வளாகம் தனி பல்கலைக்கழகமாகிறது
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
வவுனியா வளாகம் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக உள்ளது.
அதனை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்படவுள்ளது.
இதற்கான அனைத்துப் பணிகளையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், கல்வி அமைச்சும் தற்போது இறுதிப்படுத்தியுள்ளன.
உயர்கல்வியில், வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதியின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பல்கலைக்கழகங்களில் தற்போதுள்ள பீடங்களுக்கு மேலதிகமாக, மேலும் 2 பீடங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக, அடுத்த ஆண்டில் மேலும் அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.