வத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் பலி!
வத்தளையில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வத்தளை நகரில் இன்று முற்பகல் கவனயீனமாக பாதையை கடக்க முயன்ற பாடசாலை ஆசிரியை லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சிலர் வெள்ளைக் கடவையின் ஊடாக பாதையை கடந்து சென்றதைத் தொடர்ந்து, குறித்த ஆசிரியை திடீரென பாதைக்கு குறுக்கே பயணிக்க முற்பட்ட போதே எதிர்பாராத விதமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவில் கற்பித்து வந்த 48 வயதுடைய ஜெ.சசிகலா என்ற ஆசிரியை எனத் தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.