1 |
படுத்துத்தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். |
கனவு. |
2 |
ஒற்றைக்காலில் காலில் சுற்றுவான் ஓய்ந்து போனால் படுத்து விடுவான் |
பம்பரம். |
3 |
கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும். |
செருப்பு. |
4 |
ஒரு பானைச் சோறு வடித்து, ஓராயிரம் பேருக்குப் போட்டு, இன்னும்கூட மிச்சமிருக்கு. |
சுண்ணாம்பு. |
5 |
மடக்காமல் பறக்குதே, அது என்ன மந்திரி ? சிமிட்டாமல் விழிக்குதே, அதுதான் அரசே. |
தட்டாரப் பூச்சி. |
6 |
ஒல்லியான மனிதன் ; ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன்? |
ஊசி. |
7 |
நீரிலே கொண்டாட்டம்; நிலத்திலே திண்டாட்டம் |
மீன். |
8 |
சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர் |
தீக்குச்சி. |
9 |
கோயிலைச் சுற்றிக் கறுப்பு; கோயிலுக்குள்ளே வெளுப்பு |
சோற்றுப் பானை. |
10 |
பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா. |
சீத்தாப்பழம். |
11 |
நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன? |
கடிகாரம். |
12 |
முதுகை அமுக்கினால் மூச்சு விடுவான் பல்லை அழுத்தினால் பாட்டுப் பாடுவேன் |
ஆர்மோனியம். |
13 |
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள். |
நிலா. |
14 |
ஏணிமேலே கோணி; கோணி மேலே குழாய்; குழாய் மேலே குண்டு; குண்டு மேலே புல்லு; புல்லு மேலே பூச்சி. |
மனிதனின் கால், வயிறு, கழுத்து, தலை, மயிர், பேன். |
15 |
மொட்டைப் பாட்டிக்கு, முழுகத் தெரியாது. |
வெண்ணெய். |
16 |
ஐந்து அடுக்கு; நாலு இடுக்கு |
விரல்கள். |
17 |
கிணற்றைச் சுற்றிப் புல். |
கண் புருவம். |
18 |
சாண் உயரப் பையன், வைத்ததெல்லாம் சுமப்பான். |
அடுப்பு. |
19 |
பட்டணத்தில் இருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன். ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது . |
சூடம், சாம்பிராணி. |
20 |
அக்கா சப்பாணி. தங்கை நாட்டியக்காரி. |
உரல், உலக்கை . |
21 |
அரைச் சாண் குள்ளனுக்குக் கால் சாண் தொப்பி. |
பேனா. |
22 |
உயிரில்லை ; ஊருக்குப் போவான். காலில்லை; வீட்டுக்கு வருவேன் வாயில்லை ; வார்த்தைகள் சொல்வான். |
கடிதம். |
23 |
நிலத்தை நோக்கி வருவான்; நுரையைக் கக்கிச் செல்வான். |
கடல் அலை |
24 |
அன்னதான மண்டபத்தில் அழகான குருவி. அழகான குருவிக்கு முழம் நீளம் வால்! |
அகப்பை . |
25 |
என் தாயோ கடல்; தந்தையோ சூரியன்; என்னை விரும்பாத விடே இல்லை. |
உப்பு |
26 |
தம்பிக்கு எட்டும்; அண்ணனுக்கு எட்டாது. |
உதடு, தம்பி என்று சொல்லும் போது கீழ் உதடு மேல் உதட்டை தொடும். அண்ணன் என்னும்போது தொடாது. |
27 |
அறைகள் அறுநூறு; அத்தனையும் ஓர் அளவு. |
தேன் கூடு. |
28 |
உருவம் இல்லாதவன்; சொன்னதைத் திருப்பிச் சொல்வான். |
எதிரொலி. |
29 |
குளித்தால் கறுப்பு; குளிக்காவிட்டால் சிவப்பு. |
நெருப்பு |
30 |
நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு நறுக்கென்று கடிக்கிற வேலை. |
அரிவாள்மனை. |
31 |
தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள். |
பால், மோர், நெய். |
32 |
உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும் கொடுப்பான், வழியும் நடப்பான். |
நாய். |
33 |
காலையில் ஊதும் சங்கு; கறி சமைக்க உதவும் சங்கு. |
சேவல். |
34 |
கறுப்புச் சட்டைக்காரன்; காவலுக்குக் கெட்டிக்காரன். |
பூட்டு . |
35 |
தொட்டால் மணக்கும்; குடித்தால் புளிக்கும். |
எலுமிச்சம்பழம். |
36 |
நடக்கத் தெரியாதவன் நடப்பவனுக்கு வழி காட்டுகிறான். |
கைகாட்டி |
37 |
ஏரிக்கரை உயர்ந்திருக்கும், எட்டிப் பழம் சிவந்திருக்கும், காகம் கறுத்திருக்கும், காக்கைக் குஞ்சு வெளுத்திருக்கும். |
அடுப்பு, நெருப்பு, கரி, சோறு. |
38 |
இரவிலே பிறந்த இளவரசனுக்குத் தலையிலே குடை. |
காளான். |
39 |
உலர்ந்த கொம்பிலே விரிந்த பூ – அது என்ன? |
குடை. |
40 |
ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. |
வெங்காயம். |
41 |
ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன் ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்; ஆனால் நனைய மாட்டேன் |
சூரியன். |
42 |
வெட்ட வெட்டத் தழைக்கும் பட்டணத்து வேம்பு, அது என்ன? |
தலைமுடி. |
43 |
சூரியன் காணாத கங்கை ; சுண்ணம் தோற்கும் வெள்ளை; மண்ணிற் பண்ணாத பாண்டம். |
தேங்காய். |
44 |
பறிக்கப் பறிக்க பெரிதாகும் அது என்ன? |
குழி. |
45 |
வட்ட வட்டச் சிமிழில் இட்டதெல்லாம் குட்டிப் பாம்பு. |
இடியாப்பம். |
46 |
தேய்க்கத் தேய்க்க நுரைக்கும் அடிக்க அடிக்க வெளுக்கும். |
சோப்பு. |
47 |
எட்டாத கொம்பில் மிட்டாய்ப் பொட்டலம். |
தேன் கூடு. |
48 |
மொட்டை மாடு உட்கார்ந்திருக்கிறது மூக்கணாங்கயிறு மேய்ந்து வருகுது. |
பூசணிக்காயும் அதன் கொடியும். |
49 |
வராதிருந்து வந்தேன்; வந்துவிட்டுப் போனேன்; போன பிறகு வந்தேன்; இனிப் போனால் வரமாட்டேன். நான் யார் ? |
பல். |