மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
01. மிருகங்களை போல்
நடந்து கொள்பவன்
சுதந்திர மனிதனாக
இருக்க முடியாது.
02. செயலில் கெட்டவனை விட..
மனதில் கெட்டவனே
மிகவும் கெட்டவன்.
03. மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை..
பிறருக்கு கொடுப்பதில்தான்
இருக்கிறது.
04. உண்மை மற்றும் வன்முறை
அற்ற செயல்களால் தான்
கடவுளைக் கொஞ்சமாவது
பார்க்க முடியும்.
அவை இரண்டும்தான் என் கடவுள்.
அவை ஒரு நாணயத்தின்
இருபக்கங்கள் போன்றவை.
05. நான் சிரித்து.. மகிழ்ச்சியுடன்
இருக்காவிட்டால் எப்போதோ
இறந்திருப்பேன்.
06. இந்த உலகத்தில் பலர் பசியுடன்
இருக்கின்றனர். அவர்கள் முன்
கடவுள் ரொட்டித் துண்டாக
மாற மாட்டார்.
07. உழைப்பின்றி உண்ணுபவர்களை
திருடர்கள் என்று தான்
சொல்ல வேண்டும்.
08. லட்சியத்தில் சுயநலமின்றி ஈடுபட்டால்
எல்லோருடைய கவனத்தையும்
கவர்வீர்கள்.
09. அன்பின் வழியாக செய்கிற
ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக்
கொடுத்துக்கொண்டே இருக்கும்.
10. எப்படி வேண்டுமானாலும் பணத்தை
சம்பாதித்து கொள்ளலாம்..
ஆனால் அதை ஒரு அறிவாளியால்
மட்டுமே காப்பாற்ற முடியும்.
11. சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை..
காலம் சோம்பேறியை
மதிப்பதில்லை.
12. கோழையால் யாரையும்
மன்னிக்க முடியாது.
மனஉறுதி கொண்டவர்களே
மன்னிக்கும் மாபெரும்
குணத்தைப் பெற்று இருப்பார்கள்.
13. எவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை
ஏற்படுத்திக் கொள்கிறானோ
அவனே சுதந்திரமானவன்.
14. அழகிய அன்பின் இல்லத்திற்கு
இணையான பள்ளிக்கூடமே
இல்லை.
15. சோம்பலை உங்கள் செயல்
ஊக்கத்தால் வெல்லுங்கள்.
16. தற்பெருமை எங்கு முடிவடைகின்றதோ
அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.
17. ஒரு நல்ல இலட்சியத்தை
நிறைவேற்ற வேண்டுமானால்
நேர்மையான நல்ல வழிமுறைகளைதான்
கைக்கொள்ள வேண்டும்.
18. நிறைய அறிவுரைகளை விட
சிறிதளவாக இருந்தாலும்
கடைப்பிடித்தல் என்பது சிறந்தது.
19. தியாகம் செய்துவிட்டு வருந்துபவன்
தியாகி அல்ல.
20. சில அறங்களில் ஆண்களை விட
பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர்.
அந்த அறங்களில் அகிம்சையும் ஒன்று.
21. நல்ல நண்பனை விரும்பினால்..
நல்ல நண்பனாக இரு.
22. ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை
சிந்தி உழைத்துப் பிழைத்தால்
மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும்.
23. பெண்களே.. ஆசைகளுக்கும்
ஆண்களுக்கும் அடிமையாய்
இருக்க மறந்து விடுங்கள்.
24. உழைப்பவர்களின் கையில்தான்
உலகம் இருக்கிறது.
பிறர் உழைப்பில் வாழ்பவன்
ஒருநாளும் முன்னேற முடியாது.
25. நல்ல இருளிற்கு பிறகே
ஒளி பிரகாசிக்கிறது..
துக்கத்தை அனுபவித்த
பிறகே சுகம் தெரிகிறது.